அணு ஆயுத சோதனையை நிறுத்த வட கொரியா முடிவு

தினமலர்  தினமலர்
அணு ஆயுத சோதனையை நிறுத்த வட கொரியா முடிவு

பியாங்யாங் : 'அணு ஆயுத சோதனையை இனி வட கொரியா நடத்தாது' என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

இந்நிலையில் வட கொரியா, தென் கொரியா இடையே பதற்றம் குறைந்து அமைதியான சூழல் தற்போது உண்டாகியுள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னும் முதன்முறையாக வரும் மே மாதம் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அணு ஆயுத சோதனை, பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் தொலை தூரம் தாக்கும் ஏவுகணை சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. ஏப்.,21 முதல் அணுஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ள அதிபர் கிம் ஜோங் உன், அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

வட கொரியாவின் போக்கு உலகப் போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் கவலை கொண்ட நிலையில், அணு ஆயுத சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை