'நோட்டா' கதை கேட்டதும் சம்மதித்த விஜய் தேவரகொன்டா

தினமலர்  தினமலர்
நோட்டா கதை கேட்டதும் சம்மதித்த விஜய் தேவரகொன்டா

தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர் விஜய் தேவரகொன்டா. தமிழில் முதல்முறையாக ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'நோட்டா' படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் நடிக்க சம்மதித்ததன் காரணம் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

“அர்ஜுன் ரெட்டி' படம் வெளிவந்ததும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என்னிடம் ஒரு கதையைக் கொண்டுவந்தார். ஆனந்த் சங்கர் என்ற திறமையான இயக்குனரின் கதை, கேட்டுப் பாருங்கள் என்றார். எனக்கு தமிழ்ப் படத்தில் நடிக்க விருப்பமில்லை. இருந்தாலும் அவர்கள் சொன்னதற்காக கதையைக் கேட்டேன். முதல் முறை கதையைக் கேட்ட போது அன்றைய நாள் படப்பிடிப்பால் மிகவும் சோர்ந்து போய் இருந்தேன். ஆனந்த் சங்கரை இன்னொரு நாள் வந்து கதை சொல்லும்படி கேட்டுக் கொண்டேன். ஒரு வாரம் கழித்து வந்து இந்த 'நோட்டா' கதையைச் சொன்னார். அவரிடம் கதையைக் கேட்டதும் உடனடியாக நடிக்க சம்மதித்தேன்,” என்றார்.

மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து, ஸ்டிரைக்கால் நின்றுவிட்டது. இப்போது மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இந்த வருடக் கடைசியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை