பொழுது போக்கு இடமாக மாறிய யாழ். பண்ணைக் கடற்கரை!

PARIS TAMIL  PARIS TAMIL
பொழுது போக்கு இடமாக மாறிய யாழ். பண்ணைக் கடற்கரை!

யாழ். பண்ணைக் கடற்கரை தற்போது பல பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடமாகப் பேணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கடந்த காலங்களிலும் பார்க்க தற்சமயம் இங்கு பொழுதைக் கழிக்க வரும் மக்கள் தொகை அதிகமாகியுள்ளது.
 
உடற்பயிற்சிக்கு வருபவர்கள், சிறுவர்கள், பெண்கள், வேறு இடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் என குறித்த பகுதி மாலை வேளைகளில் நிரம்பி வழிகிறது. சனி, ஞாயிறு தினங்களில் இங்கு பொழுதைக் கழிக்க வருவோர் தொகை மேலும் அதிகரித்துள்ளது.
 
அங்கு குதிரைச் சவாரி, படகுச் சேவை என்பவையும் மிகவும் சிறப்பானவை. ஆனால் இங்கு வரும் சில இளம் ஜோடிகள் நடந்து கொள்ளும் விதம் சிறுபிள்ளை களைக் கூட்டிக்கொண்டு பொழுதைக் கழிக்கச் செல்லும் பெற்றோரைக் கூச்சப்பட வைக்கின்றது.
 
இங்கு வரும் ஜோடிகள் தங்களையும் மறந்து, அருகில் நிற்கும் பொது மக்களையும் பொருட்படுத்தாது, முகம் சுளிக்கும் விதத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதில் பெரும்பாலானோர் தனியார் வகுப்புக்களுக்கு கற்கச் செல்லும் மாணவ மாணவிகளாகும்.
 
இவர்களது பெற்றோர் இவர்களை படிக்க என்று அனுப்பி வைக்க, இவர்கள் பெற்றோரையும் ஏமாற்றி கடைசியில் தாங்களும் ஏமாற்றப்பட்டு நிற்கும் நிலைதான் மிஞ்சிப் போகிறது என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை