69 வருடங்களின் பின்னர் லண்டனை வாட்டும் கடும் வெயில்! மக்கள் அவதி
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தற்போது கடும் வெயில் அடித்து வருகிறது.
கோடைக்காலம் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.
நேற்று அதிகபட்சமாக மேற்கு லண்டன் பகுதியில் 27.9 செண்டிகிரேட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.
1949-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த அளவுக்கு வெயில் அடிப்பது இதுவே முதன்முறையாகும்.
குளிரில் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட லண்டன் வாசிகள் வெயிலின் தாக்கம் தாங்காமல் குளிர் பிரதேசங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.