தீபிகா அடுத்த பாய்ச்சலுக்கு தயார்!

PARIS TAMIL  PARIS TAMIL
தீபிகா அடுத்த பாய்ச்சலுக்கு தயார்!

 பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மாவுக்கு அடுத்தபடியாக, தீபிகாவுக்கும், படத் தயாரிப்பின் மீது ஆசை வந்துள்ளது.

 
பத்மாவதி படத்துக்கு பின், நடிப்பில் கவனம் செலுத்துவதை குறைத்து, படத் தயாரிப்பின் மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார், அவர். இதற்காக, சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை விரைவில் துவக்க திட்டமிட்டுள்ளார். முதலாவதாக தயாரிக்கும் படத்தில், தானே ஹீரோயினாக நடிக்கவும் முடிவு செய்துள்ளார், தீபிகா.
 
''திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் ஆசை; அதற்கான காலம், தற்போது கனிந்துள்ளதாக கருதுகிறேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது, என் நோக்கமல்ல; படங்களில் நடித்து, வேண்டிய அளவு சம்பாதித்து விட்டேன். நாமும் தரமான படங்களை தயாரிக்கலாமே என்ற ஆசை தான், இதற்கு காரணம்,'' என்கிறார், தீபிகா.

மூலக்கதை