சுவிஸ் நாட்டில் காயமடைந்த நிலையில் நாடு திரும்பிய இலங்கையர்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
சுவிஸ் நாட்டில் காயமடைந்த நிலையில் நாடு திரும்பிய இலங்கையர்கள்!

சுவிட்ஸர்லாந்து அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
அவர்கள் இலங்கை வருவதற்காக சுவிட்ஸர்லாந்தில் இருந்து புறப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
 
விபத்துக்குள்ளான 12 பேரில் ஒருவரின் நிலை ஆபத்தாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
 
ஏனைய 11 பேரும் சிறு காயமடைந்து சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து சென்றுள்ளதாக இலங்கை நிரந்தர பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை நிரந்தர பிரதிநிதி அலுவலக அதிகாரிகள் குழுவொன்று சூரிச் நகரத்தை நோக்கி சென்றுள்ளதாக  வெளியுறவு அமைச்சு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

 

மூலக்கதை