ஐபிஎல் டி20 லீக்: ஐதராபாத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

தினகரன்  தினகரன்

மொஹாலி: ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி வீரரான கிறிஸ் கெயில் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 63 பந்துகளில் 104 ரன்களை குவித்தார். இந்த ஐபிஎல் சீசனின் முதல் சதத்தை கெயில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே எடுத்து, பஞ்சாப் அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

மூலக்கதை