துப்பாக்கிக்கு குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த பெண்! - காவல்துறையினர் விசாரணை!!

PARIS TAMIL  PARIS TAMIL
துப்பாக்கிக்கு குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த பெண்!  காவல்துறையினர் விசாரணை!!

இளம் பெண் ஒருவர் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால் அவர் காவல்துறையினருக்கு விளக்கமளிக்க மறுத்துள்ளார். 
 
சனிக்கிழமை இரவு,  Seine-et-Marne இல் உள்ள Jossigny மருத்துவமனைக்கு இளம் பெண் ஒருவர் தனது கையில் துப்பாக்கி குண்டு துளைத்த நிலையில் மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவமனையில் துப்பாக்கி குண்டு துளைத்ததுக்குரிய காரணம் கோரப்பட்டுள்ளது. ஆனால் அவர் பேச மறுத்துள்ளார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க,  அப்பகுதி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
 
ஆனால், குறித்த பெண் காவல்துறையினருக்கு எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை. இதனால் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க பணித்தனர். இருப்பினும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை