31 மாதங்களுக்கு பின் இந்தியா வருகிறது பாக் கிரிக்கெட் வாரிய குழு

தினமலர்  தினமலர்
31 மாதங்களுக்கு பின் இந்தியா வருகிறது பாக் கிரிக்கெட் வாரிய குழு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழு, 31 மாதங்களுக்கு பின்னர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளது.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் வரும் 21-ம் தேதி ஐ.சி.சி கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விதமாக பாக்.,கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜிம் ஷேதி , மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுபான் அகமது தலைமையிலான பாக் கிரிக்கெட் வாரியகுழு இந்தியா வர உள்ளதாக கூறப்படுகிறது. 31 மாதங்களுக்கு பின்னர் பாக்., கிரிக்கெட் வாரிய குழுவினர் இந்தியா வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் வீரர்களின் ஒழுங்குமுறை , சர்வதேச கிரிக்கெட்டின் அமைப்பு, டுவெண்டி-20 போட்டியில் வீரர்கள் தேர்வு உட்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை