அவதானம்! - இன்றும் தொடரும் போக்குவரத்து தடை!!
இன்று, ஏப்ரல் 19, வியாழக்கிழமை இரண்டாவது நாளாக போக்குவரத்து தடைப்பட உள்ளது. SNCF ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் பல்வேறு பொது போக்குவரத்து சேவைகள் தடைப்பட உள்ளன.
நேற்று, புதன்கிழமையைத் தொடர்ந்து, இன்று பாதிக்கும் மேற்பட்ட சேவைகள் தடைப்பட உள்ளன. TGVக்களில் மூன்றில் ஒன்றும், TER மற்றும் Transiliens சேவைகளில், ஐந்தில் இரு சேவைகளும் மாத்திரமே இயங்கும். Intercity சேவைகளில் நான்கில் ஒன்று மட்டும் சேவையில் இருக்கும்.
சர்வதேச சேவைகளில், Eurostar ஐந்தில் நான்கு சேவைகள் இயங்கும் எனவும், மூன்றில் ஒரு Lyria சேவையும் இயங்கும் எனவும், சர்வதே சேவைகளில் பெரிதளவில் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இல்-து-பிரான்சுக்குள், RER B இரண்டில் ஒரு சேவையும், RER A மற்றும் RER C நான்கில் மூன்று சேவைகளும் இயங்கும் எனவும் SNCF நிர்வாகத்திடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.