இலங்கை கடற்பரப்பில் அபூர்வ உயிரினம்! படையெடுக்கும் மக்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை கடற்பரப்பில் அபூர்வ உயிரினம்! படையெடுக்கும் மக்கள்

இலங்கை கடற்பரப்பில் அபூர்வமான ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையில் ஒட்டிப்பிறந்த கடலாமை குட்டிகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
வனவிலங்கு வரலாற்றில் இதுவரை ஒட்டிப் பிறந்த ஆமைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கடலாமைகள் மிரிஸ்ஸ கடல் பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் கடலாமைகள் பாதுகாப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இரண்டு கடலாமைகளும் சிறப்பான உடல் நிலையில் உள்ளதாக மிரிஸ்ஸ வனவிலங்கு அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த ஆமைகளைப் பார்வையிடுவதற்காக அப்பகுதியிலுள்ள மக்கள் பெருந்தொகையானோர் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

மூலக்கதை