புனேவில் தண்ணீர் தட்டுப்பாடு ... சிஎஸ்கே போட்டிகளுக்கு சிக்கல்?

தினகரன்  தினகரன்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டங்கள் புனே, மாகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த மைதானத்தை பராமரிப்பதற்காக பவானா அணையில் இருந்து தண்ணீர் எடுக்க மும்பை உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகளுக்கு தண்ணீர் எடுக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே லீக் ஆட்டங்களுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே காரணத்துக்காக 2016 ஐபிஎல் சீசனில், மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற இருந்த ஆட்டங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை