சிறைச்சாலைக்குள் இருந்து 30 தொலைபேசிகள் மீட்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறைச்சாலைக்குள் இருந்து 30 தொலைபேசிகள் மீட்பு!!

நேற்று செவ்வாய்க்கிழமை Essonne இல் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இருந்து 30 ஸ்மார்ட் தொலைபேசிக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
Essonneனின் Fleury-Mérogis சிறைச்சாலைக்குள் இருந்தே இந்த தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. சிறைக்கைதிகள் பயன்படுத்திய இந்த தொலைபேசிகள், சிறைச்சலையின் கழிவறைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிறைக்கைதி ஒருவரே அதிகாரிகளுக்கு இந்த தகவலை தெரிவித்ததைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டை இடம்பெற்றது. நேற்று நண்பகலில், 12க்கும் மேற்பட்ட ஐபோன்கள் மேலும் சில திறன்பேசிகள் என மொத்தம் 30 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. 
 
Fleury-Mérogis சிறைச்சாலையில் தற்போது 4,300 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். தவிர, இதுவே ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலையுமாகும். பாதுகாப்புக்களை தாண்டி தொலைபேசிகள் உட்கொண்டுவரப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மூலக்கதை