இம்மானுவல் மக்ரோன் - ஜனாதிபதியாக ஒரு வருடம்! - கருத்துக்கணிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
இம்மானுவல் மக்ரோன்  ஜனாதிபதியாக ஒரு வருடம்!  கருத்துக்கணிப்பு!!

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படு, ஒரு வருட காலத்தின் பின்னர் இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு குறித்த கருத்துக்கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று புதன்கிழமை வெளியாகியுள்ளது. 
 
கடந்த ஒருவருட காலத்தில் ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோனின் செயற்பாடு எப்படி உள்ளது என பிரெஞ்சு மக்களிடன் iFop நிறுவனம் கருத்துக்கணிப்பு எடுத்தது. இதில் பத்தில் 6 பேர்கள் 'திருப்தியில்லை' என தெரிவித்துள்ளார்கள். நீண்டகாலமாக பிரான்சில் நிலவி வந்த தொழிலாளர் ஆர்ப்பாட்டம், கலவரம் இன்றும் தொடர்ந்தாலும், பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான மக்ரோன் மிக கடுமையான சட்டங்களை கொண்டுவந்து, கட்டுப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், சூறாவளி, காட்டுத்தீ என மிகப்பெரும் இயற்கை அனர்த்தத்திற்கு முகம் கொடுத்திருந்ததும், அரசு துரித கதியில் செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
 
கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில், 24 வீதமானவர்கள் 'மிகவும் திருப்தியின்மை' எனவும், 34 வீதமானவர்கள் 'திருப்தியில்லை' எனவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை, '38 வீதமானோர் 'திருப்தி' எனவும், 4 வீதமானோர் மட்டும் 'மிகவும் திருப்தி' எனவும் தெரிவித்துள்ளனர். 
 
*கருத்துக்கணிப்பு ஏப்ரல் 12 முதல் 16 ஆம் திகதி வரை, இணையம் மூலம் 1,201 பேர்களிடம் எடுக்கப்பட்டிருந்தது.

மூலக்கதை