விளையாட்டு விபரீதமானது: துப்பாக்கியால் சுட்டு சிறுவன் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
விளையாட்டு விபரீதமானது: துப்பாக்கியால் சுட்டு சிறுவன் பலி

புதுடெல்லி: டெல்லியில், துப்பாக்கியை வைத்து விளையாடியபோது, குண்டு பாய்ந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். டெல்லி, கண்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன், தன்னுடைய நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

இந்நிலையில், தான் வைத்திருந்த துப்பாக்கி திடீரென வெடித்து குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

விசாரணையில், தன்னுடைய நண்பனின் தந்தையின் துப்பாக்கி என்றும், அதை சிறுவர்கள் வைத்து விளையாடியபோது இந்த விபரீதம் நடந்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.     

.

மூலக்கதை