குழந்தைக்கு ஜிகாத் என பெயர் சூட்டிய பெற்றோர்! - மறுத்த அரசு!!

PARIS TAMIL  PARIS TAMIL
குழந்தைக்கு ஜிகாத் என பெயர் சூட்டிய பெற்றோர்!  மறுத்த அரசு!!

பிறந்த குழந்தை ஒன்றுக்கு, பெற்றோர் 'ஜிகாத்' என பயங்கரவாத அமைப்பின் பெயரை சூட்டியுள்ளனர். ஆனால் அப்பெயரை சூட்டுவதற்கு நீதிமன்றம் மறுத்துள்ளது. 
 
இது போன்ற கோரிக்கைகளுக்கு அரசு முன்னதாக அனுமதி அளித்திருந்தாலும், தற்போது இதுபோன்ற பெயர்களுக்கான அனுமதியை அரசு மறுத்து வருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் Toulouse நகரில் பிறந்த ஆண் குழந்தை ஒன்றுக்கு 'ஜிகாத்' எனும் பெயரினை அக்குழந்தையின் பெற்றோர்கள் சூட்டினார்கள். அப்பெயரினை பதிவு செய்ய நகர மண்டபத்தினை அணுகிய போது, அவர்கள் இந்த கோரிக்கையை நிராகரித்தனர். அதேவேளை, அரச வழக்கறிஞர் அலுவலகத்துக்கு இது தொடர்பான முறைப்பாடு ஒன்றையும் நகரமண்டபம் வழங்கியிருந்தது. 
 
அதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு, நீதிமன்றத்துக்கு தீர்ப்புக்கு வந்தது. Toulouse நீதிமன்றம், 'இந்த பெயர் சூட்டுவதற்கு அனுமதி மறுத்துள்ளது.

மூலக்கதை