திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான பிரபுதேவா படம்
தமிழ் திரைத் துறையினருக்கு திருட்டு இணையதளங்களில் புதிய படங்கள் வெளியாகி பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரத்திலேயே இணையதளங்களிலும் அவை வந்து விடுகின்றன. லட்சக்கணக்கானோர் திருட்டு இணையதளங்களில் படங்களை பார்த்து விடுவதால் தியேட்டர்களில் வசூல் குறைந்து தயாரிப்பாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.