கதுவா சிறுமி பலாத்கார வழக்கு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கதுவா சிறுமி பலாத்கார வழக்கு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாஜ அமைச்சர்கள் இருவர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனை மாநில கவர்னர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்குகிறது. இதில் 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மட்டும் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

இதன் பொருட்டு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் பலத்த பாதுகாப்புடன் இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். சிறுவன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக சிறார் சட்டத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.

எனவே, அவன் மீதான விசாரணையை நீதிபதி நிறுத்தி வைப்பார் என தெரிகிறது.


இதற்கிடையில் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்  இன்று மதியம் விசாரிக்கிறது.

.

மூலக்கதை