டோனிக்கு ஆபத்தா? கட்டுப்பாடு விதித்த சென்னை நிர்வாகம்!

PARIS TAMIL  PARIS TAMIL
டோனிக்கு ஆபத்தா? கட்டுப்பாடு விதித்த சென்னை நிர்வாகம்!

மகேந்திர சிங் டோனி இருசக்கர வாகனத்தில் சுற்றக்கூடாது என, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
 
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக ஐ.பி.எல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதால், வீரர்களுக்கு அணி நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
 
வீரர்களின் நலன் கருதியே சென்னை அணி நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. டோனிக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுவது என்பது மிகவும் பிடிக்கும்.
 
இந்நிலையில், டோனி இருசக்கர வாகனத்தில் சுற்றக் கூடாது. அவர் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வாகனத்தையே அவர் பயன்படுத்த வேண்டும் என நிர்வாகம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
டோனி சென்னை வந்தால் பயணிப்பதற்காக, இங்கு இருசக்கர வாகனங்களை வைத்துள்ளார். அவர் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் தனியாக செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை