எஸ்.பி.ஐ., காசோலைக்கு விண்ணப்பிக்க வாடிக்கையாளர்களுக்கு 31 வரை, ‘கெடு’

தினமலர்  தினமலர்
எஸ்.பி.ஐ., காசோலைக்கு விண்ணப்பிக்க வாடிக்கையாளர்களுக்கு 31 வரை, ‘கெடு’

ஐதராபாத் : எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, அத­னு­டன் இணைக்­கப்­பட்ட ஐந்து வங்­கி­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­களை, மார்ச், 31க்குள், புதிய காசோலை புத்­த­கங்­க­ளுக்­காக விண்­ணப்­பிக்­கும்­படி அறி­வு­றுத்தி உள்­ளது.

இது குறித்து, சமூக வலை­த­ள­மான, ‘டுவிட்­ட­ரில்’ எஸ்.பி.ஐ., வெளி­யிட்­டுள்ள செய்­தி­யில், ‘எஸ்.பி.ஐ., உடன் இணைக்­கப்­பட்ட, ஸ்டேட் பேங்க் ஆப் பிகா­னிர் – ஜெய்ப்­பூர் உள்­ளிட்ட ஐந்து வங்­கி­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­கள், மார்ச், 31க்குள், புதிய காசோலை புத்­த­கங்­க­ளுக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும். ஏப்., 1ம் தேதி முதல், பழைய வங்­கி­க­ளின் காசோலை புத்­த­கங்­கள் செல்­லாது’ என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

கடந்த ஆண்டு ஏப்­ர­லில், எஸ்.பி.ஐ., உடன், ஸ்டேட் பேங்க் ஆப் பிகா­னிர் – ஜெய்ப்­பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் திரு­வாங்­கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்­டி­யாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஐத­ரா­பாத் ஆகிய துணை வங்­கி­கள் மற்­றும் பார­திய மகிளா வங்­கி­யும் இணைக்­கப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை