பீகாரில் பரிதாபம்: டார்ச் லைட் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்யப்பட்ட பெண் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

பாட்னா: பீகாரில் உள்ள மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.பீகார் மாநிலம், சகார்சா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 18ம் தேதி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மின்சாரம் இல்லாததால் அந்த பெண்ணுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். காக்கி உடையணிந்த ஒருவர் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்வது போன்ற காட்சி சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த பெண் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சிய போக்கிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூலக்கதை