பங்கி ஜம்பிங் சாகசத்தின் போது விபத்து: உயிருக்கு போராடும் நடாஷா

தினமலர்  தினமலர்

2006ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றவர் நடாஷா சூரி. அதன் பிறகு ஹிந்தி படங்களில் நடித்தார், மாடலிங், விளம்பர படங்கள் ஆகியவற்றிலும் பிசியாக இருந்து வருகிறார். டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

நடாஷா ஒரு கடை திறப்பு விழாவுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தோனேஷியா சென்றார். கடை திறப்பு விழா முடிந்ததும், அந்த நாட்டை சுற்றிப்பார்க்க கிளம்பினார். இந்தோனேஷியாவின் டூரிட்ஸ் அட்ராக்ஷனாக இருப்பது பங்கி ஜம்பிங். உயரமான மலை உச்சியிலிருந்து ரோப் கட்டி ஆற்றில் குதிக்கும் சாகச நிகழ்ச்சி இது. இதில் பங்கேற்க விரும்பிய நடாஷா அங்கு சென்றார்.

உயரமான மலையில் இருந்து கீழே குதித்தபோது எதிர்பாராத விதமா ரோப் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தார். தலைகீழாக ஆற்றின் அடி ஆழத்திற்கு சென்றார். பாதுகாப்புக்காக நின்றவர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆற்றில் உள்ள பாறைகள் இடித்ததில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நடாஷா உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.

மூலக்கதை