ம.நடராஜன் இழப்பு ஈடு செய்ய முடியாதது மு.க.ஸ்டாலின் புகழாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ம.நடராஜன் இழப்பு ஈடு செய்ய முடியாதது மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: ம. நடராஜன் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ம. நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு மு. க. ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: நடராஜன் மறைவு அதிர்ச்சியடையும் வகையில் அமைந்துள்ளது. நடராஜன் மாணவ பருவத்தில் இருந்த போது தமிழ் மொழிக்காக நடைபெற்ற போராட்ட களத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு உணர்வை வெளிப்படுத்தியவர். தலைவர் கருணாநிதியின் அன்பை பெற்றவராக திராவிட இயக்கத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்டவராக திகழ்ந்தார்.

அவர் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு ஆற்றிய பணிகளை மறந்து விட முடியாது.

தொடக்க காலத்தில் திமுக மாணவர் அமைப்பில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மொழி போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட வரலாற்றை மறந்து விட முடியாது.   அப்படிப்பட்ட ஒரு இலக்கியவாதியாக, தமிழ் மொழி மீது பற்று கொண்டவராக விளங்கிய நடராஜன் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவருடைய பத்திரிக்கை அலுவலக ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை திமுக சார்பில் குறிப்பாக தலைவர் கருணாநிதி சார்பில் மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை