சென்னையில் நாளை நடைபெறும் மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் ரஜினி பங்கேற்பு
சென்னை: இமயமலையிலிருந்து இன்று சென்னை திரும்பும் நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிகிறது. சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று துவங்குகிறது.
5 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும். இமயமலை சென்றுள்ள ரஜினிகாந்த், தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்புகிறார்.
இதையடுத்து நாளை சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே இம்மாத இறுதியில் மருத்துவ பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா செல்கிறார். அடுத்த மாதம் சென்னை திரும்பிய பிறகு தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் தனது கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்து மாநாடு நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
சென்னையிலேயே இந்த மாநாடு நடைபெறும் என கூறப்படுகிறது.