பெரியார் சிலை உடைப்பு புதுகை அருகே பதற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெரியார் சிலை உடைப்பு புதுகை அருகே பதற்றம்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டைவிடுதியில் அரசு துவக்கப்பள்ளி எதிரே திக சார்பில் மண்டல தலைவர் ராவணன் ஏற்பாட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பெரியாரின் முழு உருவ கற்சிலை வைக்கப்பட்டது. பெரியாரின் நினைவு நாள், பிறந்தநாள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளின்போது அப்பகுதியினர் பெரியார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பெரியார் சிலையின் தலையை துண்டாக உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இன்று காலை சிலை உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த திகவினர் மண்டல தலைவர் ராவணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் அங்கு வந்து பார்வையிட்டார். இதுகுறித்து அவர் ஆலங்குடி போலீசில் புகார் அளித்தார்.

இந்த தகவல் பரவியதும் திகவினர் அங்கு குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிந்து சிலையை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

.

மூலக்கதை