ரயிலில் மது கடத்தல்: வங்கி அதிகாரி கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரயிலில் மது கடத்தல்: வங்கி அதிகாரி கைது

கரூர்: கரூர் ரயில் நிலையத்திற்கு மும்பையிலிருந்து திருநெல்வேலி செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் ேநற்று வந்தது. ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் ரயிலில் சோதனை நடத்தியபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 2 பேரிடம் நடத்திய சோதனையில் அவர்கள் கொண்டு வந்த பையில் வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. பிராந்தி பாட்டில்கள் 180 மிலி 48, 375 மிலி 24, 750 மிலி ரம் பாட்டில் 6, ஒரு லிட்டர் பிராந்தி பாட்டில் 22 என மொத்தம் 100 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அவர்கள் கரூர் வெண்ணெய்மலையை சேர்ந்த ஜெகநாதன்(53), சதீஷ்(36) என்பதும், ஜெகநாதன் கரூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வருவதும், மங்களூரில் இருந்து கரூர் வந்ததும் தெரிய வந்தது.

போலீசார் அவர்களை கைது செய்தனர்.

.

மூலக்கதை