ஹசாரேவுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் உறுதி

தினமலர்  தினமலர்
ஹசாரேவுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் உறுதி

அமத்நகர்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே போராட்டத்தை கைவிட வேண்டும் மகாராஷ்டிரா அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
லோக்பால் மசோதா, விவசாயிகள் பிரச்னையை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே,74 டில்லி ராம்லீலா மைதானத்தில் மார்ச் 23-ம் தேதி சத்தியகிரக போராட்டத்தை துவக்க திட்டமிட்டுள்ளார். போராட்டத்தில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் கிரீஸ் மகாஜன், நேற்று அன்னா ஹசாரேயை அகமத்நகரில் சந்தித்து பேசினார். அப்போது தங்களின் உடல்நலம் கருதி போராட்டத்தை கைவிடுங்கள் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அமைச்சரின் சமரச பேச்சுவார்த்தையை ஏற்க ஹசாரே மறுத்துவிட்டார். திட்டமிட்டபடி டில்லியில் மார்ச் 23-ம் தேதி சத்தியகிரக போராட்டம் நடக்கும் என்றார்.

மூலக்கதை