மோடி அரசின் செயல்பாடு குறித்து யாரும் கேள்விகேட்க முடியாது: ராகுலுக்கு ராஜ்நாத் பதிலடி
லக்னோ: மோடி தலைமையிலான மத்திய அரசின் நேர்மை, சிறப்பான செயல்பாடு குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். டெல்லியில் தற்போது காங்கிரஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பாஜ அரசின் செயல்பாடுகள் குறித்து ராகுல்காந்தி, மன்மோகன்சிங் ஆகியோர் கடுமையாக விமா்சித்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பதிலடி கொடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற விழா ஒன்றில் அவர் பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பா. ஜ. ,வின் செயல்பாடு குறித்தோ, நேர்மை குறித்தோ யாரும் கேள்வி கேட்க முடியாது.
எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை.
ஊழல் செய்த பா. ஜ. , அமைச்சர்கள் யாரையும் காட்ட முடியுமா.
மத்தியில் பா. ஜ. , ஆட்சி அமைத்த பின் இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளில் அதிகரித்துள்ளது.
7. 5 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ள பொருளாதார வளர்ச்சியை விரைவில் இரட்டிப்பாக்குவோம் என சர்வதேச நிதி அமைப்பு கணித்துள்ளது. மின் இணைப்பு, சமையல் எரிவாயு, ரயில், சாலை போக்குவரத்து, தொழில்துறை முன்னேற்றம் என அனைத்திலும் இலக்கு நிர்ணயித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.