சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கிச்சூடு! பெண் உட்பட இருவரின் நிலை?
கொழும்பு - ஆமர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.