இலங்கையர்களுக்கு மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
நாணயத்தாள்களை நோக்கத்துடன் சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளர்.
இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் இத்தகைய குற்றங்களுக்கு பத்து வருடங்கள் வரை சிறைத்தண்டனையும் தண்டப் பணமும் விதிக்கப்படலாம் என்று மத்திய வங்கி அத்தியட்சகர் தீபா செனவீரட்ன தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த நாணயத்தாள்களை வர்த்தக வங்களில் கொடுத்து புதிய நாணயத்தாள்களை பெற்றுக்கொள்ளும் இறுதி திகதி இம்மாதம் 31ம் திகதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.