லா சப்பலில் 16 வயதுடைய இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து!!

PARIS TAMIL  PARIS TAMIL
லா சப்பலில் 16 வயதுடைய இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து!!

16 வயதுடைய இளம் பெண் ஒருவர் லா சப்பல் பகுதியில் உள்ள மதுபானக்கடை ஒன்றில் வைத்து கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.  
 
18 ஆம் வட்டாரத்தின் Place de la Chapelle பகுதியில் உள்ள மதுபானக் கடையில் சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் குறித்த மதுபானக்கடையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. பெண் ஒருவர் தாக்கப்பட்டு இருப்பதாக தொலைபேசியில் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர். 
 
மதுபான விடுதிக்குள் இளம் பெண் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.  காவல்துறையினரின் விசாரணைகளில், மதுபான விடுதி நிர்வகியே கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், இரத்த கறைகளை தண்ணீர் ஊற்றி அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். 
 
தாக்குதலுக்கு இலக்கான பெண் Clichy இல் உள்ள  Beaujon மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிர்வாகி கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்ட கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

மூலக்கதை