உங்களுக்கு அழகல்ல உர்ஜித் படேல்!

தினமலர்  தினமலர்
உங்களுக்கு அழகல்ல உர்ஜித் படேல்!

பஞ்­சாப் நேஷ­னல் பேங்­கில் மோசடி நடந்­த­வு­டன், பல விமர்­ச­னங்­கள் எழுந்­தன. அதில் ஒன்று, மத்­திய ரிசர்வ் வங்கி இதை முன்­ன­தா­கவே உணர்ந்து, தடுக்­கத் தவ­றி­யது ஏன் என்ற கேள்­வி­ தான்.
ஆர்.பி.ஐ.,யின் கவர்ன­ரான உர்­ஜித் படேல், இது­பற்றி வாயே திறக்­கா­மல் இருந்­தார். கடை­சி­யாக அவர் வாய் திறந்து பேசி­யது, மேலும் விமர்­ச­னங்­க­ளுக்கே இட்­டுச் சென்­றுள்­ளது. பிர­த­மர் நரேந்­திர மோடி ஆட்­சிக்கு வந்த பின்­, ஆர்.பி.ஐ., கவர்ன­ராக நிய­ம­னம் செய்­யப்­பட்­ட­வர் உர்­ஜித் படேல். பொது­வாக அமை­தி­ யா­ன­வர்; ஓராண்­டில் அதி­க­பட்­சம் ஐந்து, ஆறு முறை பேசி­னாலே அதி­கம். அத்­த­கைய மனி­தர், கடந்த வாரம் வாயைத் திறந்­தார்.
அது­வும் அவர் மீது வைக்­கப்­பட்ட விமர்­ச­னத்­துக்­குப் பதில் அளிப்­ப­தற்­காக. ஊட­கங்­களும் நிதித்­துறை வல்­லு­னர்­களும் தொடர்ச்­சி­யாக, ஆர்.பி.ஐ., மீது விமர்­ச­னம் வைத்­துக்­கொண்டே இருந்­தனர். பொதுத்­துறை வங்­கி­களில் உள்ள ஓட்­டை­க­ளைப் பயன்­ப­டுத்தி, பல மோச­டி­கள் அரங்­கே­றின. சமீ­பத்­தில், நிரவ் மோடி, 14 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வுக்கு ஏமாற்­றி­விட்டு, வெளி­நாடு போய்­விட்­டார். பல ஆண்­டு­க­ளாக, இத்­த­கைய ஏமாற்­றுக்­கா­ரர்­கள், நாட்­டை­யும் சட்­டத்­தை­யும் ஏமாற்­றி­விட்­டுத் தப்­பி­வி­டும் புள்­ளி­வி­ப­ரம் நம்மை எரிச்­ச­ல­டைய வைக்­கின்றன.
இந்­நி­லை­யில், நிதி அமைச்­சர் அருண் ஜெட்­லி­யும், ஆர்.பி.ஐ., மீது பாய்ந்­தார். அவர்­களு­டைய கண்­கா­ணிப்பு குறை­யு­டை­ய­தாக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.இது­வரை அனைத்து விமர்­ச­னங்­க­ளுக்­கும் பேசா­தி­ருந்த உர்­ஜித், உடனே வெகுண்­டார். தங்­கள் பக்­கம் இருக்­கும் நியா­யங்­க­ளை, சமீ­பத்­தில் ஒரு கல்­லுாரி நிகழ்ச்­சி­யில் அடுக்­க­டுக்­காக எடுத்­து­ வைத்­தார்.

விளக்­கம்:
அதா­வது, ஆர்.பி.ஐ.,யால் தனி­யார் துறை வங்­கி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யும்; ஆனால், பொதுத் துறை வங்­கி­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்­றார் உர்­ஜித். அதற்கு அவர் சொன்ன கார­ணம், பொதுத் துறை வங்­கி­கள் முழு­மை­யாக, ஆர்.பி.ஐ.,யின் கட்டுப்­பாட்­டில் இல்லை. அந்த வங்­கி­கள் மத்­திய நிதி அமைச்­ச­கத்­தின் கட்­டுப்­பாட்­டில் இயங்­கு­கின்றன. இரட்­டைத் தலைமை உள்­ள­தால், தங்­க­ளால் ஒன்­றுமே செய்ய முடி­ய­வில்லை என்­றார்.
மேலும், ஆர்.பி.ஐ.,யால் பொதுத் துறை வங்­கி­களின் இயக்­கு­னர்­க­ளையோ நிர்­வா­கத்­தையோ அகற்ற முடி­யாது; அந்த நிர்­வா­கக் குழுக்­களின் முடி­வு­களை விலக்­கி­வைத்­து­விட்டு மேலே செயல்­பட முடி­யாது; அதன் தலை­வ­ரையோ, நிர்­வாக இயக்­கு­ன­ரையோ பத­வி நீக்­கம் செய்­ய ­முடி­யாது.
வேறு வங்­கி­க­ளோடு இணைக்க முடி­யாது; அந்த வங்­கி­கள் பல நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட, ஆர்.பி.ஐ., அனு­மதி தேவை­யில்லை, அத­னால், பல வங்­கிச் செயல்­பா­டு­களின் அனு­ம­தியை ரத்­து­செய்­ய­வும் முடி­யாது; அதே­ போல், அந்த வங்­கி­களை திவா­லா­ன­தாக அறி­வித்து நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வும் முடி­யாது என, பெரிய பட்­டி­யலே வாசித்­தார் உர்­ஜித்.
அதா­வது, என்­னு­டைய கட்­டுப்­பாட்­டுக்­குள் பொதுத் துறை நிறு­வ­னங்­கள் முழு­மை­யாக வரா­த­போது, என்னை அதன் தவ­று­க­ளுக்­கெல்­லாம் ஏன் பொறுப்­பேற்­கச் சொல்­கி­றீர்­கள் என, மறை­மு­க­மா­கக் கேட்­கி­றார். மேலும், இத்­த­கைய அதி­கா­ரங்­கள் அத்­த­னை­யை­யும் எனக்­குக் கொடுங்­கள், நான் எல்­லா­வற்­றை­யும் சீர்­செய்து காட்­டு­கி­றேன் என்­ப­து­ தான் அவ­ரது கோரிக்கை. வெளிப்­பார்­வைக்கு இந்­தக் கோரிக்கை நியா­ய­மா­கத் தெரி­ய­லாம். இதில் பல பிரச்­னை­கள் உள்ளன.

பிரச்னை:
ஒரே இடத்­தில் அதி­கா­ரம் குவி­வது என்­றுமே நல்­ல­தல்ல. இரட்­டைத் தலைமை என்­பது இன்­று­ நேற்­றல்ல... ஆர்.பி.ஐ., உத­ய­மான காலத்­தில் இருந்து இருப்­ப­து­ தானே. நிதி நிர்­வா­கத்தை ஆர்.பி.ஐ.,யும், மக்­க­ளு­டைய தேவை­களை உணர்ந்து அதற்­கேற்ப திட்­டங்­களை வகுப்­ப­தற்கு அர­சின் நிதித் துறை­யும் இருப்­பது இந்திய ஜன­நா­ய­கத்­தின் வலு­வான அம்­சங்­களில் ஒன்று. இத்­தனை அதி­கா­ரங்­களும் கொடுத்­தால் தான் நட­வ­டிக்கை எடுப்­பேன் என்று சொல்­வ­தும் ஏற்­பு­டை­யது அல்ல. வங்­கித்­து­றை­யி­லேயே உச்­ச­பட்ச அதி­கா­ரம் கொண்ட பதவி, ஆர்.பி.ஐ., கவர்னர் பதவி. மேலும், ஆர்.பி.ஐ.,க்குப் போது­மான சுயேச்­சைத் ­தன்­மை­யும் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு உள்ள அதி­கா­ரங்­களை முறை­யா­கப் பயன்­ப­டுத்­தி­னீர்­களா என்ற கேள்­விக்கு உர்­ஜித் தரும் பதில்­கள் ஏற்­கத்­தக்­க­தல்ல.
சரி­யா­கச் சொல்­வ­தென்றால், தன் அதி­கா­ரங்­களுக்கு உட்­பட்டு, இத்­தனை முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டேன் என்­ப­தைப் பட்­டி­ய­லிட்டு, தன் தரப்பு நியா­யத்தை அவர் நிறு­வி­யி­ருந்­தால், அது ஏற்­கத்­தக்­க­தாக இருந்­தி­ருக்­கும். அதை­வி­டுத்து, தனக்கு அதி­கா­ரம் போதாது என பேசு­வது உண்­மை­யில் வேடிக்கை. அது­வும் இத்­தனை மாதங்­க­ளா­கப் பேசா­த­வர், தன் மீது ஒரு விமர்­ச­னம் என்­ற­வு­டன் பேசு­கி­றார். பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்ட போது, மக்­கள் அனு­ப­விக்­கும் துன்­பங்­க­ளைப் பார்த்து, அதை குறைப்­ப­தற்­கான விளக்­கங்­க­ளையோ, செய்­யப்­பட்­டுள்ள ஏற்­பா­டு­களையோ பற்றி ஒரு வார்த்தை பேசா­த­வர். அப்­போது, நிதித்­து­றைச் செய­லர் சக்­தி­காந்த தாஸ் தான் ஊட­கங்­களின் அத்தனை கேள்விக­ளுக்­கும் முகம் கொடுத்­த­வர்; உர்­ஜித் அல்ல.
போது­மான அதி­கா­ரம்:
உர்­ஜித் படே­லின் கருத்­து­களுக்கு பதில் சொல்­லும் விதமாக, முன்­னாள் ஆர்.பி.ஐ., தலை­வர் சி.ரங்­க­ரா­ஜன் தெரி­வித்­தி­ருப்­பது கவ­னத்­துக்­கு­ரி­யது. ‘‘வங்­கி­க­ளைக் கண்­கா­ணிப்­ப­தற்கு, ஆர்.பி.ஐ.,க்குப் போதிய அதி­கா­ரம் உள்­ளது. ‘‘ஆனால், பொதுத் துறை நிறு­வ­னங்­கள் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு மத்­திய அர­சோடு கலந்­தா­லோ­சிப்­ப­தும் அவ­சி­யம்” என்ற அவ­ரது கருத்து வலி­மை­யா­னது.
ஆர்.பி.ஐ.,யும் நிதித் துறை­யும் எதி­ரும் புதி­ரு­மாக இல்­லா­மல் இணக்­க­மாக கைகோத்து நடப்­பதே நாட்­டுக்கு நல்­லது. அல்­லது இரு­வ­ரும் தத்­த­மது மரி­யா­தைக்­கு­ரிய எல்­லை­களில் நின்­று­கொண்டு, அவ­ர­வர் பணி­க­ளைச் செவ்­வனே செய்­வதே ஏற்­கத்­தக்­கது.இன்­னொரு விஷ­யத்­தை­யும் உர்­ஜித் படேல் கவ­னிக்­கத் தவ­றி­விட்­டார். தன்­னைத் தற்­காத்­துக் ­கொள்­வ­தற்­காக பேசி­ய­வர், தன் பேச்­சி­னால், பொது­மக்­கள் மத்­தி­யில் பொதுத் துறை வங்­கி­க­ளைப் பற்றி இருக்­கும் அபிப்­பி­ரா­யங்­கள் முற்­றி­லும் சரிந்­து­வி­டும் என்­பதை ஏன் மறந்­தாரோ தெரி­ய­வில்லை.
பொதுத் துறை வங்­கி­கள் இவ­ரது கட்­டுப்­பாட்­டுக்­குள் இல்லை என்­றால், யாரு­டைய கட்­டுப்­பாட்­டுக்­குள் அவை வரு­கின்றன; ஏதே­னும் ஒன்று நடந்­தால், அவற்­றில் சேமிப்­பு­களை வைத்­துள்ள கோடா­னு­கோடி மக்­க­ளுக்கு யார் ஜவாப்­தாரி?உண்­மை­யில், உர்­ஜித் படே­லின் பேச்சு, தன் பொறுப்­பு­களைத் தட்­டிக்­க­ழிப்­ப­தா­கவே இருக்­கிறது. எத்­தனை மேடு­பள்­ளங்­கள் இருந்­தா­லும், ஸ்டி­ய­ரிங்கை வலு­வா­கப் பிடித்து, வங்­கித் துறை எனும் வாக­னத்­தைச் சீரா­கச் செலுத்­த­வேண்­டி­யதே, ஆர்.பி.ஐ., கவர்ன­ரின் வேலை. அதி­லி­ருந்து பின்­வாங்­கு­வது, ஓட்­டு­ன­ருக்கு மட்­டு­மல்ல, வாக­னத்­துக்­குமே கேடு விளை­விக்­கும்.
-ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

மூலக்கதை