கடும் பனிப்பொழிவு! - இன்று மாலை வரை 9 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

PARIS TAMIL  PARIS TAMIL
கடும் பனிப்பொழிவு!  இன்று மாலை வரை 9 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

வெள்ளிக்கிழமை மாலை முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல், இன்று திங்கட்கிழமை மாலை வரை 9 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
Calvados, Eure, Paris மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு நகரங்கள், Yvelines, Essonne மற்றும் Val-d'Oise உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என பிரெஞ்சு வானிலை ஆய்வு மைய்யம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 16 மணியில் இருந்து இன்று திங்கட்கிழமை 16 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் முழுவதும் 5cm வரை பனிப்பொழிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தவிர, பரிசுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவசர கால தங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை வரை கடும் குளிர் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை