கத்திக்குத்துக்கு இலக்காகி அகதி பரிதாபப் பலி!!

PARIS TAMIL  PARIS TAMIL
கத்திக்குத்துக்கு இலக்காகி அகதி பரிதாபப் பலி!!

சட்டவிரோதமாக தங்கிவந்த அகதி ஒருவர் நேற்று சனிக்கிழமை கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 
 
கலே காட்டுப்பகுதியில் தங்கியிருந்த ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய அகதி ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். மிக ஆழமான கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மார்ச் மாதம் 6 ஆம் திகதியில் இருந்து அங்கு தங்கியிருக்கும் அகதிகளுக்கு அரசு உணவு வழங்கி வருகிறது. நேற்று சனிக்கிழமை உணவு வழங்கும் போது ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்றின் முடிவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததும், அப்பகுதிக்கு ஆறு வாகனங்களில் காவல்துறையினர் வந்தனர். காவல்துறையினரின் வாகனத்தை 150க்கும் மேற்பட்ட அகதிகள் சூழ்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை