பழிவாங்கும் முயற்சியில் தவறான நபரை தாக்கியவர் கைது!!
நபர் ஒருவர், மது போதையில் நபர் ஒருவரை மோசமாக தாக்கியுள்ளார். பழிவாங்கும் நோக்கோடு அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை Ivry-sur-Seine (Val-de-Marne) இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர், பிறிதொரு நபரை பழிவாங்கும் நோக்கோடு அவரது வீட்டுக்குச் சென்று மிக மோசமாக தாக்கியுள்ளார். பதிலுக்கு மற்றைய நபரும் திருப்பி தாக்கியுள்ளார். ஆனால், தாம் பழிவாங்கவேண்டிய நபர் இவர் இல்லை எனவும், தவறுதலாக தாக்கியுள்ளோம் என்பதையும் அறிந்துகொண்ட நபர் மிக வேகமான அங்கிருந்து ஓடித்தப்பியுள்ளார்.
பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, குறித்த நபரின் அடையாளங்களை வைத்து நபரினை கைது செய்துள்ளனர். 'மோசமான வன்முறை, தாக்குதல்,' போன்ற பிரிவின் கீழ் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.