சுவிட்ஸர்லந்து மலையில் பனிச்சரிவு - நான்கு பேர் பலி?
சுவிட்ஸர்லந்தின் Vallon d'Arbiபனிமலைப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு பேர் உயிரிழந்திருக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
மாண்ட நால்வரில் இதுவரை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காணமால் போன மூன்று பேருக்கான தேடல் தற்போது நடந்து வருகிறது.
மலைப்பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட பனிச்சரிவு ஒன்றில் 3 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.