பரிஸ் - ஆறாவது தளத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை!!
நேற்று வெள்ளிக்கிழமை மாலை பெண் ஒருவர் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள Sorbonne கட்டிடத்தில் இருந்து குறித்த பெண் குதித்துள்ளார். விசாரணைகளில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30மணி அளவில், வகுப்பறையில் குறித்த பெண் தனியாக இருந்துள்ளார். பின்னர் 6.50 மணி அளவில், அங்கிருந்து ஜன்னலைத் திறந்து கீழே குதித்துள்ளார்.
காவல்துறையினர் மேற்கொண்டு தொடர்ந்த விசாரணைகளில் குறித்த பெண் கைபட ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார். மேலதிக தகவல்கள் எதையும் அப்பெண் எழுதியிருக்கவில்லை. 14 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை தொடர்கின்றனர்.