மிக மோசமாக தாக்கப்பட்ட 3 வயது சிறுமி! - தாய் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
மிக மோசமாக தாக்கப்பட்ட 3 வயது சிறுமி!  தாய் கைது!!

மூன்று வயதுடைய சிறுமி ஒருத்தி மிக மோசமான காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். அவளின் 29 வயதுடைய வளர்ப்புத் தந்தை மற்றும் தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
Beauvais (Oise) இல் வசிக்கும், குறித்த சிறுமியின் பெண்ணின் மாமனார், கடந்த திங்கட்கிழமை அவசர உதவிக்கு அழைத்து, சிறுமி குளிக்கும் போது குளியலறையில் வழுக்கி விழுந்துள்ளதாக குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து அவசர உதவி வேகமாக அங்கு விரைந்துள்ளது. குறித்த சிறுமியை மருத்துமவனையில் சேர்த்த பின்புதான், சிறுமி மிக மோசமாக பாதிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்தனர். 
 
சிறுமியின் உடலில் தீக்காயங்கள் மற்றும் சில இரத்த கண்டல் காயங்கள் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 25 வயதுடைய அப்பெண்ணின் தாயாரும், அவளின் வளர்ப்பு தந்தையும் புதன்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை