சென்னை கோயம்பேட்டில் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் வீட்டின் சமையலறையில் இருந்த சிலிண்டர் வெடித்து 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். பலத்த காயமடைந்த ஐய்யப்பன், மதன் மற்றும் சரஸ்வதி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு கசிவு ஏற்பட்டது தெரியாமல் கொசுவர்த்தி பற்றவைத்தபோது சிலிண்டர் வெடித்தது.

மூலக்கதை