பெண்களிடம் கிண்டல் நைஜீரிய வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி

தினகரன்  தினகரன்

திருப்பூர்:  திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே விஜயமங்கலம் ரோட்டில், நேற்று முன்தினம் 2 பெண்கள் ஒரு ஸ்கூட்டியில் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் ஒரு பைக்கில் வந்த 2 நைஜீரிய வாலிபர்கள், பெண்கள் வந்து கொண்டிருந்த ஸ்கூட்டியில் மோதினர். கீழே விழுந்த பெண்களை கிண்டல் செய்த வாலிபர்கள், பைக்கை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள்,  வாலிபர்கள் சென்ற பைக்கை துரத்தி பிடித்து அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

மூலக்கதை