டி-20யில் இலங்கை தோல்வி; வங்கதேச டிரஸ்சிங் ரூம் கண்ணாடி உடைப்பு

தினமலர்  தினமலர்
டி20யில் இலங்கை தோல்வி; வங்கதேச டிரஸ்சிங் ரூம் கண்ணாடி உடைப்பு

கொழும்பு: முத்தரப்பு டுவென்டி-20 போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக வங்கதேச அணி வெற்றி பெற்றதையடுத்து, மர்மநபர்கள் சிலர் வங்கதேச அணியின் டிரஸ்சிங் ரூம் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து சிசிடிவி பதிவை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி பிரேமதாசா மைதானத்தின் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

முன்னதாக இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், பரபரப்பான இறுதி ஓவரில் வெற்றிக்கான 12 ரன்களை அடித்து வெற்றி பெற்ற வங்கதேசம் பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. நாளை(மார்ச் 18) நடைபெறும் பைனலில் இந்தியா-வங்கதேச அணிகள் மோத உள்ளன.

மூலக்கதை