தூத்துக்குடி அனல்மின் நிலைய 5வது யூனிட் பழுது

தினகரன்  தினகரன்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையம் கடந்த 1979ம் ஆண்டு துவக்கப்பட்டது. தலா 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி யூனிட்கள் இங்கு இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் மொத்தம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். இங்குள்ள 5 யூனிட்டுகளுமே மிகவும் பழமையானவை என்பதாலும், நிர்ணயிக்கப்பட்ட ஆயுள்காலத்தை தாண்டி இயங்கி வருவதாலும் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. நேற்று காலை இங்குள்ள 5வது மின் உற்பத்தி யூனிட்டின் பாய்லரில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

மூலக்கதை