நிர்பயா தாயின் அழகை வர்ணித்த மாஜி எம்.பி.,

தினமலர்  தினமலர்
நிர்பயா தாயின் அழகை வர்ணித்த மாஜி எம்.பி.,

பெங்களூரு: ''பலம் வாய்ந்த ஆண்கள் பலாத்காரம் செய்தால், அவர்களிடம் சண்டை போடாமல், சரணடைந்து விடுங்கள்,'' என, ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரியும், காங்., முன்னாள் எம்.பி.,யுமான சாங்கிலியானாவின் சர்ச்சைக்குரிய பேச்சால், பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, இம்மாதம், 9ம் தேதி பெங்களூரில் நடந்த, 'நிர்பயா விருது' விழாவில், டில்லி பேருந்து ஒன்றில் பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த நிர்பயா தாய் ஆஷா தேவி, ஐ.ஜி., ரூபா ஆகியோரின் சேவையை பாராட்டி, விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில், சாங்கிலியானா பேசியதாவது: ஆஷா தேவியின் உடலமைப்பே, இவ்வளவு கட்டுக்கோப்பாக அழகாக இருக்கிறது. அப்படியென்றால் அவர் மகள் நிர்பயா எப்படி இருந்திருப்பார்.

பலம் வாய்ந்த ஆண்கள் பலாத்காரம் செய்தால், அவர்களிடம் சண்டை போடாமல், சரணடைந்து விடுங்கள். அப்படி செய்தால், உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்கலாம். அதன் பின், நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

சாங்கிலியானாவின் பேச்சு, செய்தி சேனல்களில் வெளியானது. இதனால், பெண்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிர்பயாவின் தாயார், ‛மனிதர்களின் மனநிலை இன்னும் மாறவில்லை' எனத் தெரிவித்தார்.

மூலக்கதை