அதிமுகவில் இருந்து கே.சி. பழனிசாமி நீக்கம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில்

தினகரன்  தினகரன்

சென்னை : கட்சியின் கொள்கை முடிவுகளை தனி நபர் எடுக்க முடியாது என்று கே.சி. பழனிசாமி நீக்கம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். கட்சி கொள்கையின் விதிமுறைகளை மீறி பேசியதால் கே.சி. பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஆட்சி வேறு, கொள்கை விவரங்கள் வேறு என்பதை அறியாததால் அதிமுகவில் இருந்து கே.சி. பழனிசாமி நீக்கப்பட்டார் என்று கூறினார்.மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது  என்றும் காவிரி விவகாரத்தையும் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் முடிச்சுப்போடக்கூடாது என்றும் ஜெயக்குமார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை