டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்
சென்னை : டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியுள்ளார். கடந்த 15ம் தேதி தனது அமைப்பிற்கு டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என பெயரை அறிவித்தார். இந்த பெயரில் தனக்கு உடனப்பாடு இல்லை என கூறி நாஞ்சில் சம்பத் விலகியுள்ளார். டிடிவி அறிவித்த கட்சி பெயரில் அண்ணாவும், திராவிடமும் இல்லை என்றும் இனிமேல் அரசியல் என்ற சிமிழில் அடைப்பட்டு கிடக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.