இந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சி; ‘சென்செக்ஸ்’ 509 புள்ளிகள் சரிவு

தினமலர்  தினமலர்
இந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சி; ‘சென்செக்ஸ்’ 509 புள்ளிகள் சரிவு

மும்பை : சர்­வ­தேச மற்­றும் உள்­நாட்டு அர­சி­யல் நில­வ­ரம் கார­ண­மாக, இந்­திய பங்­குச் சந்­தை­கள், நேற்று வீழ்ச்சி கண்­டன.

மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, 509 புள்­ளி­கள் வீழ்ச்சி கண்டு, 33 ஆயி­ரத்து, 176 புள்­ளி­களில் நிலை கொண்­டது.தேசிய பங்­குச் சந்­தை­யின், ‘நிப்டி’ குறி­யீடு, 165 புள்­ளி­கள் இறக்­கம் கண்டு, 10 ஆயி­ரத்து, 195 புள்­ளி­களில் நிலை பெற்­றது.

வர்த்தகப் போர்:
இந்த சரிவு குறித்து, பங்­குச் சந்தை வல்­லு­னர்­கள் கூறி­ய­தா­வது: இந்­தியா மட்­டு­மின்றி, சீனா, ஜப்­பான் உள்­ளிட்ட ஆசிய நாடு­களின் பங்­குச் சந்­தை­களும் நேற்று சரிவை கண்­டன. ஐரோப்­பிய பங்­குச் சந்­தை­க­ளி­லும், வர்த்­த­கம் சரி­வு­டன் துவங்­கி­யது. அமெ­ரிக்க அதி­பர், டொனால்டு டிரம்­பின் நட­வ­டிக்­கை­க­ளால் ஏற்­பட்­டுள்ள ஸ்தி­ர­மற்ற அர­சி­யல் சூழல்.

அந்­நாட்டு மத்­திய வங்கி, வட்டி விகி­தத்தை உயர்த்­தும் என எதிர்­பார்ப்பு; இறக்­கு­மதி வரியை உயர்த்­தி­ய­தால், சர்­வ­தேச வர்த்­த­கப் போர் மூளும் என்ற அச்­சம் ஆகி­யவை, ஐரோப்­பிய, ஆசிய பங்­குச் சந்­தை­களின் சரி­விற்கு கார­ணங்­கள் என­லாம்.

இத்­து­டன், இந்­தியா, ஏற்­று­மதி மானி­யத்தை குறைக்க வேண்­டும் என, அமெ­ரிக்கா, உலக வர்த்­தக அமைப்­பில் அளித்­துள்ள புகார்; சீனப் பொருட்­கள் இறக்­கு­ம­திக்கு கூடு­தல் வரி விதிக்­கப் போவ­தாக டிரம்ப் விடுத்­துள்ள மிரட்­டல் போன்­ற­வை­யும், இந்­தியா, சீனா, ஜப்­பான் உள்­ளிட்ட ஆசிய நாடு­களின் பங்­குச் சந்­தை­கள் சரிய வழி வகுத்­தன.

எனி­னும், இந்­திய பங்­குச் சந்­தை­கள் சரி­விற்கு மேலும் பல கார­ணங்­களை கூற­லாம். குறிப்­பாக, பா.ஜ., கூட்­ட­ணி­யில் இருந்து தெலுங்கு தேசம் விலகி உள்­ள­தும்; எதிர்க்­கட்­சி­களை ஒருங்­கி­ணைக்க, காங்., துவக்­கி­யுள்ள முயற்­சி­களும்; மத்­திய அரசு மீது, ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சி நம்­பிக்கை இல்லா தீர்­மா­னத்­திற்கு நோட்­டீஸ் அளித்­துள்­ள­தும், தேசிய அர­சி­யலை பர­ப­ரப்­பாக்­கி­யுள்­ளது.

பங்கு விற்பனை:
இத­னால், இந்த ஆண்டே பொதுத் தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம் என்ற எதிர்­பார்ப்­பும் எழுந்­துஉள்­ளது.பட்­ஜெட்­டில் அறி­விக்­கப்­பட்ட நீண்ட கால மூல­தன ஆதாய வரி, ஏப்., 1 முதல் அம­லுக்கு வர உள்­ளது. இதில், பிப்., 1 முதல் மார்ச் 31 வரை நடை­பெ­றும் பங்கு பரி­வர்த்­த­னை­க­ளுக்கு விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. இதன் கார­ண­மாக, பங்­கு­கள் மூலம் லாபம் ஈட்­டிய முத­லீட்­டா­ளர்­கள், மூல­தன ஆதாய வரியை தவிர்க்­கும் பொருட்டு, பங்­கு­களை விற்­பனை செய்­த­னர்.

பங்கு ஈட்டு மதிப்­பின் அடிப்­ப­டை­யில், சந்­தை­யின் பங்கு மூல­தன விகி­தா­சா­ரம், அள­விற்கு அதி­க­மாக உயர்ந்­துள்­ளது. இது­வும் பங்கு விற்­பனை அதி­க­ரிக்க துணை புரிந்து, பங்­குச் சந்­தை­யின் இறக்­கத்­திற்கு வழி வகுத்­துள்­ளது. இவ்­வாறு அவர்­கள் தெரி­வித்­த­னர்.

ஏற்றம் – இறக்கம்:
நேற்­றைய வர்த்­த­கத்­தில், மும்பை பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­களில், 1,763 நிறு­வ­னங்­களின் பங்­கு­கள் விலை சரி­வ­டைந்­தன. எனி­னும், 917 நிறு­வ­னங்­களின் பங்­கு­கள் விலை உயர்­வு­டன் கைமா­றின. 168 பங்­கு­களின் விலை, எவ்­வி­த­மான ஏற்­றமோ, இறக்­கமோ இன்றி நிலை­யாக இருந்­தன.

மூலக்கதை