நாடு கடத்தல் வழக்கு: லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையா ஆஜர்

தினமலர்  தினமலர்
நாடு கடத்தல் வழக்கு: லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையா ஆஜர்

லண்டன்: பிரிட்டன் கோர்ட்டில் நடைபெற்று வரும், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையில் அவர் நேரில் ஆஜரானார்.

கர்நாடகாவை சேர்ந்த மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா, விமான சேவை நிறுவனம் துவக்க, வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த பணத்தை திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு அவர் தப்பியோடினார். அவரை நாடு கடத்தக்கோரி, பிரிட்டன் நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இவ்வழக்கு விசாரணையில் மல்லையா நேற்று நேரில் ஆஜரானார். இவ்வழக்கில் மே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தீர்ப்பை எதிர்த்து அவர் பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

மூலக்கதை