பி.வி.சிந்து அபார வெற்றி

தினகரன்  தினகரன்

லண்டன் : ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். கால் இறுதியில் ஜப்பானின் நஸோமி ஓகுஹராவுடன் (7வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து (4வது ரேங்க்), கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டில் 20-22 என்ற கணக்கில் தோற்று பின்தங்கினார். அடுத்த செட்டில் இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 16-18 என பின் தங்கிய சிந்து, தொடர்ச்சியாக 5 புள்ளிகளை வசப்படுத்தி 21-18 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுத்தார். இதையடுத்து, 3வது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இழுபறியாக நீடித்த இந்த செட்டிலும் அபாரமாக விளையாடி ஜப்பான் வீராங்கனையை திணறடித்த சிந்து 20-22, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் 1 மணி, 24 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

மூலக்கதை