பரிஸ் - காவல்துறையினரின் மகிழுந்தில் தகாத வார்த்தை எழுதியவருக்குச் சிறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  காவல்துறையினரின் மகிழுந்தில் தகாத வார்த்தை எழுதியவருக்குச் சிறை!!

காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் மகிழுந்தில் தகாத வார்த்தை ஒன்றை எழுதிய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
 
பரிசின் 13 ஆம் வட்டார காவல்நிலையத்துக்கு சொந்தமான மகிழுந்திலேயே குறித்த 24 வயதுடைய நபர் தகாத வார்த்தை ஒன்றை எழுதியுள்ளார். தரித்து நின்ற மகிழுந்தில் குறித்த நபர் வரைவதை தூரத்தில் இருந்து பார்த்த காவல்துறையினர் வேகமாக மகிழுந்து இருக்கும் இடத்துக்கு வந்துள்ளனர். அதற்குள்ளாக இளைஞர் தப்பிச்சென்றுள்ளார். 
 
பின்னர், குறித்த நபரை துரத்தி பிடித்த அதிகாரிகள், விசாரணைகளுக்காக காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். 'பொது சொத்துக்களை சேதமாக்கிய' குற்றத்துக்காக நபருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும் என அறியமுடிகிற. தவிர, குறித்த நபர் ஒரு 'வீதி ஓவியர்' (வீதிகளில் உள்ள மதில்களில் ஓவியம் வரைபவர்) என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை