இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி

தினமலர்  தினமலர்
இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி

புதுடில்லி: உ.பி., பீஹாரில் நடந்து முடிந்த மூன்று லோக்சபா இடைத்தேர்தலில் பா.ஜ. படுதோல்வி அடைந்தது. குறிப்பாக உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தொகுதியான கோராக்பூரில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இடைத்தேர்தலில் படுதோல்வி குறித்து பா.ஜ. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமர்சித்து கூறியதாவது: இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.தோல்வி அதிர்ச்சி அளிக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சொந்த தொகுதியில் பா.ஜ..வை வெற்றி பெற வைக்க முடியவில்லையே .. வெற்றி பெற வைக்க முடியாதவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது பற்றி பா.ஜ. ஆட்சி மன்றக் குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி கூறினார்.

மூலக்கதை